Tuesday, August 8, 2017

சிறு வயது பாடல் - Childhood song

இவ்வளவு பெரிதான இரட்சிப்பில் நாம் தணடனையிலிருந்து எப்படி தப்புவது ?

காலங்கள் பொல்லதவைகளாதலால் காலத்தை பிரயஜோனப்படுத்தி கொள்ளுங்கள் .

வாலிபனே உனது வாழ்வினில் சந்தோசம் கொள் . உனது சந்தோசம் எனது நெஞ்சை பூரிப்பாகட்டும் .

உனது கண்ணின் வழிகளிலும் காட்சியிலும் நட .

ஆனால் இவைகள் எல்லா நிமித்தம் தேவன் உம்மோடு இருப்பராக ..!!!

மகனே மகளே உணர்ந்தே ஓடி வா என்னை ஏற்பதில் தடை என்னவோ

பரமகணமே உணர்ந்தே கொள்ளவா .. இந்த மாற்றுயிர் நிற்பதென்னவோ !!!

Tuesday, August 1, 2017

வழிப்போக்கன் - Kavithai

                                                               வழிப்போக்கன் 


கடவுளின் முகம் :-

மேகம் எந்தன் சிறகு
வானம் எந்தன் படகு
இதோ வருகிறேன்
கடவுளின் முகம் காண..!!!

தேடல் :-

புதிய வானம் படைத்து
ஈரேழு லோகம் ஆள படை சூழ
மந்திரி ஆனேன் மன்னன் ஆனேன்
இதோ மனிதனாக முயல்கிறேன்
ஓடும் இந்த தனிமையில் என்னை
மறந்து என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்

துறவு :-

ஓடும் ஓடையில் ஓடாமல்
ஒய்யாரமாய் என்னுள் இருக்கும்
ஆசை கோபம் காமம் செருக்கு - நீண்ட கால நண்பர்களே
மண்டியிட்டு மாலையிடுகிறேன்
செல்லுங்கள் என்னை விட்டு

நீ வருவாய் என :-

உயிர் மட்டும் நீயென்று சென்றவள்
உயிர் நீங்கி உடல்  நசுங்கி
பிண்டத்தினை பிணந்தின்னி போல்
பார்ப்பதென்ன கொடுமை

விடுகதை கேட்டு விடை கேட்கிறாய்
விடும் (உயிர் ) கதையில் விடை தேடி
விதை மூடி வைக்கிறேன் நீ வருவாய் என.


- ப.மதிஅழகன் 




Wednesday, June 7, 2017

தனிமை தவம் - Thanaimai Thavam




இந்த உலகத்தில் நம்மை யாராவது மறந்துவிடுவார்களோ என்று சிலருக்கு தோன்றுகிறது . மறந்து விடாமல் இருக்க என்ன செய்யலாம் .. காலம் முழுக்க மக்கள் மனதில் நிலைத்திருக்க   சாகசம் செய்ய வேண்டுமா , தொண்டு , அரசியல் , கலை , விளையாட்டு இதில் எதாவது ஒன்றில் சிறந்து விளங்க வேண்டுமா ??

நாம் உயிருடன் வாழும் போதே நாம் பலரை மறந்து விடுகிறோம், ஆசிரியர்கள் , சலூன் கடைக்காரர் , பூசாரி இப்படி பல கேரக்டர் நம்ம வாழ்க்கையில வந்துட்டு போறாங்க . என் பள்ளி நண்பர்கள் கூட நான் இன்னும் நட்புல இருக்கிறேன்னு சொல்றது காதுல கேட்குது.. ஆனால் ஒரு விஷயம் .. எல்லா நண்பர்கள் கூடவும் உங்களால ஒரேய அளவுல இருக்க முடியாது . அது கொஞ்சம் மாறுபடும்.

மனம் எப்பவுமே அப்படித்தான்.  ஆனா நாம இங்க பேச போறது மனதை பத்தி இல்லை.

என் நண்பர் ஒருத்தர் சொன்னாரு ,

இந்த உலகம் நம்மை நினைச்சி பார்க்க கூடாது, இப்படி ஒருத்தன் இந்த உலகத்துல இருந்தானே யாருக்கும் தெரிய கூடாதுனு நினைக்கிறவன். எங்க போவான் ? எப்படி வாழ்வான்? அவன் மனசு எப்படி பட்டது?
இருட்டு  உலகத்துல தனியா இருக்கிற அவனை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்கா ?

அவனை பார்க்கிறதுல உங்களுக்கு வேணும்னா சுவாரசியமா இருக்கலாம். ஆனால் அவனை பாக்க நெனச்சா நீங்கதான் அவனோட முதல் எதிரி .. தீரதா தனிமையில இருக்கும் அவனை பல பேரு பார்க்க போய் இறந்துட்டாங்க , இல்லை தொலஞ்சி போய்ட்டாங்க , திரும்பி வரலைன்னு வச்சிக்கலாமே .

அவனை பார்க்க போறேன் வரிங்களானு கேட்டாரு ? எனக்கு தூக்கிவாரி போட்டது . இவர் என்ன சாகரத்துக்கு கூப்பிடறாருனு. வர முடியாதுனு பல முறை சொல்லியும் வார கணக்கா , மாத கணக்கா என்னை தொல்லைபடுத்தி என்னை சம்மதிக்க வச்சிட்டாரு. எனக்குன்னு பெருசா கடமை இல்லாததால நானும் ஒத்துக்கிட்டேன் . சரி இனி எல்லாம் விதி படி நடக்கட்டும்னு இதோ கெளம்புறோம் . ஆமா அவன் எங்கே இருக்கான் ? என்ன பன்னிக்கிட்டுருப்பான் ? யாருக்கு தெரியும் . போய் பார்ப்போம் .

பயணம் தொடரும்...



Tuesday, March 7, 2017

மகளிர் தின வாழ்த்துக்கள்





ஆதியவள்
அந்தமவள்
ஆண்களை ஈன்ற பிரம்மாவும் அவள் ..!!!

தாயவள்
தாராமவள்
தங்கையவள்
ஆண்களை காக்கும் ஈசனும் அவள் ..!!!

நீரவள்
நிலமவள்
கனளவள்
கொடியோரை அழித்திடும் ஹரனும் அவள் !!!



Tuesday, January 3, 2017

நீயும் நானும் - you and me

நீயும் நானும்  - you and me

நீயும் நானும்
இன்னும் ஒரு
போர்வைக்குள்ளே .

மனம் மட்டுமிங்கு
போன இடம்
கனவுக்குள்ளே.

இமைக்கா நொடிகள்
என்னுள் நீ வந்து போக
இமை நடுவில்  நீ
நின்று கொண்டு
 என்னை மூட.

விழி திறக்கும் போது
எதிரில் நீயே இருந்தாய் கண்ணே
கண் மூடும் போது  உன்னில்
என்னை புதைத்தாய் பெண்ணே.

உன்னோடு சாலையோரம்
நான் போகும் போது
நானோடு நாமும் ஆகிறேன் .

பின் நின்று காற்று என்னை
முன் தள்ளும் போது உன்
கூந்தலில் முகம் சாய்கிறேன் .

நீ இன்னும் அங்கே
நான் மட்டும் இங்கே
இடையில் தடையும் இல்லை
உந்தன் இடையும் இல்லை .

உயிர் போகும் போகட்டும்
உந்தன் மூச்சுக்காற்றை
எட்டு திக்கும் எந்தன்
ஆவி தேடி போகும் .


   - ப. மதி அழகன்




எதை நோக்கிப் போகிறோம்? A Journey to search the Nature God - 2

பகுதி  -1  http://infomitra10.blogspot.in/2016/12/blog-post.html

இயற்கை கடவுளை  தேடி ஒரு பயணம்  - 2 !!! ?


இயற்கை மனிதனை எச்சரிக்கை செய்வதில்லையா என்று கேட்டோம் ?? அது எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறது .. வெள்ளமாக, புயலாக , நிலநடுக்கமாக ... ஆனால் மனிதன் இன்னும் தன்னை இயற்கையை விட பெரியவனாக நினைத்து கொண்டு இருக்கிறான்.. ஒரு  தாய் எப்படி தன்  மகன்  இன்னல் தந்தாலும் பொறுத்துக்கொள்கிறாளோ அதேபோல்தான் பூமி தாயும் பொறுத்து கொண்டு இருக்கிறாள்.. அவள் பொறுமைக்கும்  அளவுண்டு. 

இயற்கை விதியை மீறி இங்கு மனிதன் நடத்தும் எந்த ஆராய்ச்சிக்கும் நிகழும் பின்விளைவு அவன் 100% உணர வாய்ப்பில்லை. நம்மை  அறியாமலே இந்த உலகை நாம் அழிக்க ஆரம்பித்துவிட்டோம் .. 

"இயற்கை நம்மை கை கழுவும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது " 

இங்கு இறப்பு என்பது உயிர் பிரிவதில்லை .. இயற்கை அல்லது பஞ்சபூதம் தனது செயல்களை எந்த உடலில் நிறுத்திவிட்டதோ அல்லது எந்த உடல் பஞ்சபூதத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லையோ அந்த உடல் பூமியில் வாழ தகுதியற்றது ஆகிறது.

இருக்கும் வரை ஒரு மனிதன் தன் சக்தி கொண்டு இயற்கையை சுரண்டி எடுக்கிறான் . ஒரு போதும் இயற்கையை மீட்டெடுக்க முயல்வதில்லை.. அதனால் அழிவு இன்று வாசல் வரை வந்துவிட்டது .

யார் நம்மை காப்பாற்றுவார்?


இன்னும் பேசுவோம்.!!!