Tuesday, August 8, 2017

சிறு வயது பாடல் - Childhood song

இவ்வளவு பெரிதான இரட்சிப்பில் நாம் தணடனையிலிருந்து எப்படி தப்புவது ?

காலங்கள் பொல்லதவைகளாதலால் காலத்தை பிரயஜோனப்படுத்தி கொள்ளுங்கள் .

வாலிபனே உனது வாழ்வினில் சந்தோசம் கொள் . உனது சந்தோசம் எனது நெஞ்சை பூரிப்பாகட்டும் .

உனது கண்ணின் வழிகளிலும் காட்சியிலும் நட .

ஆனால் இவைகள் எல்லா நிமித்தம் தேவன் உம்மோடு இருப்பராக ..!!!

மகனே மகளே உணர்ந்தே ஓடி வா என்னை ஏற்பதில் தடை என்னவோ

பரமகணமே உணர்ந்தே கொள்ளவா .. இந்த மாற்றுயிர் நிற்பதென்னவோ !!!

Tuesday, August 1, 2017

வழிப்போக்கன் - Kavithai

                                                               வழிப்போக்கன் 


கடவுளின் முகம் :-

மேகம் எந்தன் சிறகு
வானம் எந்தன் படகு
இதோ வருகிறேன்
கடவுளின் முகம் காண..!!!

தேடல் :-

புதிய வானம் படைத்து
ஈரேழு லோகம் ஆள படை சூழ
மந்திரி ஆனேன் மன்னன் ஆனேன்
இதோ மனிதனாக முயல்கிறேன்
ஓடும் இந்த தனிமையில் என்னை
மறந்து என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்

துறவு :-

ஓடும் ஓடையில் ஓடாமல்
ஒய்யாரமாய் என்னுள் இருக்கும்
ஆசை கோபம் காமம் செருக்கு - நீண்ட கால நண்பர்களே
மண்டியிட்டு மாலையிடுகிறேன்
செல்லுங்கள் என்னை விட்டு

நீ வருவாய் என :-

உயிர் மட்டும் நீயென்று சென்றவள்
உயிர் நீங்கி உடல்  நசுங்கி
பிண்டத்தினை பிணந்தின்னி போல்
பார்ப்பதென்ன கொடுமை

விடுகதை கேட்டு விடை கேட்கிறாய்
விடும் (உயிர் ) கதையில் விடை தேடி
விதை மூடி வைக்கிறேன் நீ வருவாய் என.


- ப.மதிஅழகன்