Thursday, June 10, 2021

குருதி ஆட்டம் அத்தியாயம் - 1

                                                            பகைவனின் கண் 


அமைதியான காலை வேளை, சூரியன் மெல்ல தன் கதிர்களை பரப்பிக்கொண்டிருந்தான். குருவிகள் குதூகலமாக கீச்சிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தன.விவசாயிகளோ காளைகளை உழவுக்கு கொண்டு சென்றார்கள்.பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்கள்.சூரிய கதிர்களின் வெளிச்சம் தாளாமல் கணேசன் மெல்ல எழுந்தான்.பாயைச் சுருட்டிக் கொண்டு மெல்ல வீட்டுக்குள் செல்லும் போது, இழுத்துப் போர்த்து தூங்கி கொண்டிருந்த மனைவி அலமேலுவைப் பார்த்து பொம்பளைங்க எல்லாம் வெளிய தண்ணி மோந்துகிட்ருக்காங்க, இன்னும் என்னடி தூக்கம் என்று கத்தினான். அதை சட்டை செய்யதவளாய் அவள் திரும்பி படுத்தாள். இந்தாடி  இப்போ எந்திரிக்கல அப்புறம் புரட்டி புடுவேன் என்று திட்டியவாறு கொல்லைப்புறம் சென்றான். குளித்து முடித்து வீட்டிற்குள் வரும்போது அவள் மனையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தாள். அலமேலு கஞ்சி எடுத்து வையி , சாமி கும்புட்டு வந்துடுறேன். கஞ்சி பாத்திரத்தை எடுத்து குடித்தான் , உப்பு கரித்தது . மீண்டும் மனைவி மீது எரிச்சல் கொண்டான். என்னடி கஞ்சி கரைச்சிருக்க ,மனுஷன் வாயில வைக்க முடியல, மூதேவி ஒரு நாளாவது ஒழுங்கா கடைக்கு அனுப்புறியா என்று திட்டி தீர்த்தான்.

இப்போ எதுக்கு கத்துறிங்க என்று பதிலுக்கு சீறினாள். கூறுகெட்ட சிறுக்கி என்னைய எதுத்து  பேசுறியா என்று ஓங்கி அறைந்தான். இந்தாரும் சும்மா மேல கை வைக்கிற வேலை வேணாம். எங்கண்ணங்க கிட்ட சொன்ன அம்புட்டுதான் என்று விசும்பினாள் .

சீமையில்லாத அண்ணங்க என்று ஆரம்பிக்க , இடைமறித்த அவள் , இந்தாங்க எங்க அம்மா வூட்ட பத்தி பேசுனா அம்புட்டுதான் , அப்புறம் நான் எங்க ஆத்தா வூட்டுக்கு போயிடுவேன் என்று அழுதாள்.


No comments:

Post a Comment