Tuesday, June 22, 2021

நான் வாசித்த புத்தகங்கள் - பகுதி -1 (My favourite books -1)


                                                   உறைபனி உலகில்





 ஆசிரியர் : கரந்தை ஜெயக்குமார் 

நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.

நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது
ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.
வாருங்கள் இவரோடு சேர்ந்து நாமும் இவரது பயணத்தை, பயணித்துப் பார்ப்போம்.

இந்த புத்தகம் இவளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று நான் வருத்தப்பட்டேன். அவ்வளவு விறுவிறுப்பாக ஆசிரியர் நம்மை இந்த புத்தகத்தோடு ஒன்றி விட வைத்து விடுகிறார் . இந்த புத்தகத்தை மையமாக  வைத்து சினிமா எடுக்க முயற்சிக்கலாம். திரைக்கதைக்கு தேவையான நிறைய விஷயங்கள் இதில் அமைந்துள்ளன.

மதிப்பிற்குரிய கர்னல் .பா.கணேசன் அவர்களின் தலைமைக்கே உரிய தைரியமும் எல்லாரையும் ஒன்றிணைத்து வழி நடத்தி செல்லும் விதமும் சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்தியா அண்டார்டிகாவில் அமைத்துள்ள தக்ஷின் கங்கோத்ரி ஆய்வு கூடம் பற்றியும், யாருமே எளிதில்  வந்து உதவ இயலாத பனி தேசத்தில் தாய் நாட்டுக்காக உழைத்தவர்கள் பற்றியும் தெரிய வருகிறது. மதிற்பிற்குரிய கர்னல்.பா.கணேசன் அவர்கள்  ஒரு தமிழர் என்பதையும் நம் தாய் மண்ணை அவர் அண்டார்டிக்காவிலும் தூவி உள்ளார் என்று நினைக்கும் போது  உள்ளம் பூரித்து மகிழ்கின்றது

இது மட்டும்தானா என்றால் , இல்லை மனிதன் தான் இன்னமும் இயற்கையின் முன் ஒரு சிறு குழந்தை இந்த புத்தகம் படிக்கும் பொது தோன்றுகிறது.

புத்தகத்தின் ஒரு சில வரிகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

" ஆண்டு 1912. சனவரி 17. பிற்பகல் 3.00 மணி. உலகின் தென் துருவம். அண்டார்டிகா. எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி. மிகப் பெரும் பனிப் பாலைவனம்"

"ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 12,000 கிமீ தொலைவு, கடலில் பயணித்தாக வேண்டும். முழுவதுமே இடைநில்லா பயணம்தான். கோவாவில் இருந்து அண்டார்டிகா செல்லும் வழியில், இரண்டே இரண்டு தீவுகள் மட்டுமே உண்டு. ஒன்று மொரீசியஸ் மற்றொன்று மொரியன் தீவு. மற்றபடி கடல், கடல், கடல் மட்டும்தான்."

ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை இயற்கை எந்த அளவிற்கு சோதிக்க முடியுமோ , அப்படியெல்லாம் உடலாலும்  மனதாலும் வாடி வதைக்கின்ற ஒரு பயணமாகத்தான் இந்த பனி பாலைவனம்  பயணம் இருந்திருக்க வேண்டும். மேலும் கடலை பற்றி ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார் "இயற்கையின் எண்ணற்ற வினோதங்களில் கடலும் ஒன்று. நேரில் பார்ப்பதால் மட்டுமே கடலைப் புரிந்து கொள்ள முடியாது. நீரும் அலைகளும் மட்டுமே கடல் அல்ல என்பதை ஆய்வுக் குழுவினர் அனைவரும் உணர்ந்தனர்". கடல்தான் எத்தனை  விசித்திரமானது. நீங்களும் இந்த அனுபவத்தை பெற இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்.




No comments:

Post a Comment