Friday, June 11, 2021

பிரிவினிலே ஒரு நாள்..!!!

                                                            பிரிவினிலே ஒரு நாள்..!!!







தனியே 

தன்னந்தனியே 

தந்த வலியே

இன்ப துணையே

இன்று மறந்தாய் என்னையே ..!!!


இணையே 

எந்தன் இணையே 

உன்னை இழந்தாய் 

என்னை  மறந்தாய் 

துணை ஏதுமில்லையே..!!!


கடலாய் 

கங்கை நதியாய் 

கண்ணீர் வடித்தேன் 

கரைந்தோடி வா.!!!


உடலாய் 

மண் உடலாய் 

புதைமண் உடலாய்

மட்குமுன் தேடி வா.!!!


நெருப்பாய் 

தீப்பிழம்பாய் 

எரிமலையாய் 

மனம் வெடிக்கும் முன் 

நீ அணைக்க வா.!!!


காற்றாய் 

சூழல் காற்றாய் 

புயல் காற்றாய் 

மனம்  கடக்கும் முன் 

நீ நினைவில் வா.!!!


வெளியாய் 

வெட்ட வெளியாய் 

வான வெளியில் 

நான் மறையும் முன் 

உயிரே நீ எதிரில் வா.!!!


ப.மதிஅழகன் 





No comments:

Post a Comment