Monday, June 22, 2020

இன்னுமென்ன தயக்கம்

இன்னுமென்ன தயக்கம்..!!!


இன்னுமென்ன தயக்கம்
என்னைத் தழுவிக்கொள்ள
யாருமற்ற நேரத்திலே
வந்து அணைத்துச்செல்ல..!!!

நெடுநேரம் உன் வரவுக்காக
காத்திருக்கிறேன்  - மொட்டை மாடி
தோட்டம் முழுவதும் ஏங்கி நிற்கிறேன்..!!!

விட்டுப்போன சிலிர்ப்பு எல்லாம்
திரும்ப கிடைக்குமா ?
தந்து போன கீதம் இன்று
மீண்டும் பாயுமா?

சில மாலை நேரம் நடக்கையிலே
துணையாக நீ வருவாய் - பல இரவு நேரம்
விழிக்கையிலே அணைப்பாக நீ இருப்பாய் ..!!!

இன்று மட்டும்  எங்கு போனாய்
காற்றே இளம் காற்றே
வந்து வீசி விட்டு போ
என் வீட்டில்..!!!

- ப.மதிஅழகன்

எந்த நாள் வரும் ? - When will the day come?

எந்த நாள் வரும் ?



நின்ற நாள் மழை
என்னை துரத்திட..!!!

கண்டதே உயிர்
உன்னை உருகியே .!!!

அந்த நாள் சுகம்
இன்னும் நினைத்திட..!!!

விட்டதே மனம்
பட்டுப்போகிட
கெட்டதே உயிர்
உன்னை மறந்திட ..!!!

இமை நொடிகள் கூட மறக்கவில்லை
கண்மணியில் நீயும் மறைவதில்லை..!!!

தேற்றுவார் யாருமில்லை
தேடவும் வழியுமில்லை
மன்னிக்க மனமுமில்லை
மறக்க முயல்வதேயில்லை..!!!


- ப.மதியழகன்

அருள் நீர் - Blessed water




மேகம் அற்ற வானத்திலே
தாகம் தேடி திரியும் பறவை
கனவிலே கானல் நீரைக்கண்டு
கடல் கடந்து பறந்து செல்ல ..!!!

காட்டிலே கொட்டாங்குச்சியில்
கண்டது யாரோ விட்டுச் (மழை) சென்ற நீர்..!!!

இனியொரு கணம் பொறுக்க முடியாமல்
அலகை அலசியது நீராலே..!!!

அதற்கென காத்திருந்தது போல
பாய்ந்தது ஒரு நாகம்

விடுபட்ட கனவில்
சுற்றிப்பார்த்த பறவை அருகே
ஊர்ந்து கொண்டிருந்ததது ஒரு நாகம் ..!!!

பலருக்கு உணவாக
நான் இருக்கிறேன்
எனக்கான அருள்நீர்
உந்தன் கைகளால் என்று பொழிவாயோ என
விருட்டென பறந்தது ..!!!


- ப. மதிஅழகன்






Thursday, December 13, 2018

கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்.!!!



                கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்.!!!


சொல்லாத ஏக்கம் அவளுக்குள்
நில்லாத பாசம் இவனுக்கு
பேசிடத்தான் ஆயிரம் வழிகள்
இருந்தும் கூட நெஞ்சமில்லை
யார் உரைப்பார்கள் முதல் கவிதை
முதல் முத்தம்  - முதல் அழுகை
கண் கலங்கிட பார்த்தால்தான் காதல் கசியுமா
கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்..!!!




- ப. மதிஅழகன்

ஆயிரம் காதல்


                                            ஆயிரம் காதல்

இன்னொரு ஜீவன் பிறக்கையிலே
தந்தவனின் குரல் கேட்க துடிக்கிறாள் தாயாக போறவள்
கட்டிவைத்த வெட்டி மானம் காற்றில் போக கட்டியவளை
காண பறந்து வருகிறான்.
பிரசவ அறையில் இரு குழந்தைகள்
வந்த உயிரை முத்தமிட்டு
தந்த உயிரின் கால்கள் தொடுகிறான்
கண்கள் கலங்கிட அவள்  போர்வையினுள் கால் இழுத்துக்கொள்ள
அவள் கண்ணமுடி விலக்கி காதில் அழுகிறான்
அவளவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுகிறாள்
ஆயிரம் காதல் அங்கே பிறக்கின்றது .

- ப. மதிஅழகன்

கவிதை தொகுப்பு :-


                                                   கவிதை தொகுப்பு


நிலை பிழை தவறும் தருணம் .. மனமங்கு
மாட்சியுமில்லை மகிமையுமில்லை மகேசனுமில்லை
இனி எவளுமில்லை போடி.


விட்டத்து மாடியில் சுற்றி திறந்த புறா
சுட்டான பின் பழி எதற்கு பாவம் எதற்கு
தந்தவன் மகேசன் எடுத்தவன் மகேசன்
பொருள் கூற எவருமில்லை அவனையன்றி..

சிறகுகளில்லா நாரை
தரையினில் சாகும் நாளை
காண்பதுமோர் பாவம்
உணர்வுகளேயினி சாகும்
யாரினி பிறப்பார் பாரும்
இடுகாடாய் இனி மாறும்.


வான் வருவான் மயிலோன்
தென் தருவான் குயிலோன்
இனி யாரிவரோ - மலர் தருவார் யாரோ
சுடுகின்ற வேலையில் பருநீர் தருவாரோ
மனம் மாறி வெதுவாகி இனிதான் இணைவாரோ
பார்க்கும் வேலையில் மாய்வரோ சாய்வாரோ
தோற்கும் வேலையில் மீள்வாரோ எழுவாரோ
வான் வருவான்... வருவான் .. வான் வழி வருவான் ...

காரிருள் மீது கதிரவன் தோன்றி
ஆயிரமாயிரம் விளக்குகள் ஏற்றி வைத்தான் ..
ஒளியது தோன்றியது அவனாலென அறிஞனும் சொல்லி வைத்தான்
கண்ணே உன்னை கண்டவுடன் மெய்யியல் நான் உணர்ந்தேன்
நீ துயிலெழுந்து சோம்பல் முறித்து வாசல் கோலம் போட
காணத்தான் சூரியனும் காத்திருக்கிறான்
சந்திரனுக்கு மட்டும் கோவம் உன் துயில் முகத்தை காணவில்லையென்று
அந்த மதி காணாததை இந்த மதி ஆயிரம் முறை பார்த்திருக்கிறான் இமைக்காமல்
விட்டு போ கவலையே..!!!
- ப. மதிஅழகன்

Thursday, May 10, 2018

கோட்டைப்புரம்

கோட்டைபுரம் கோட்டைபுரம் கோட்டைபுரம்
நீ நல்ல ஊரா கெட்ட ஊரா கோட்டைபுரம்
சாமி வந்து எதிரில் நின்னா கோட்டைபுரம்
நீ சாட்சி வந்து சொல்லிடனும் கோட்டைபுரம். (2)

என் சாமி.. என் சாமி .. வரம் காமி
உன்னை நம்பி வந்த மக்களுக்கு
நீயே காக்கும் தெய்வமுன்னு
சாட்சி சொல்ல வந்திடணும்
வேட்டை. வேட்டை. கோட்டை.

பாவம் கேட்கும் மக்க இங்க ஒண்ணாகுது
உன் தண்டனைக்கு எதிரி குலம் மண்ணாகுது
மனம் மாறி.. மனம் மாறி.. வர வேணும் வரம் வேணும்
எங்க முன்னோருக்கு வாக்கு தந்த காத்தருள.
வேட்டை. வேட்டை. கோட்டை.  (கோட்டைபுரம்)

நீறு நிலமெல்லாம் இங்க உன்னோடது
உன் அன்பு மட்டும் இந்த மண்ணோடது
என் ராசா.. என் ராசா.. மனமிறங்கி  வந்திடுயா
உன் மக்களுக்கு நல்ல வாழ்க்கை  தந்திடுயா
வேட்டை. வேட்டை. கோட்டை.  (கோட்டைபுரம்)

இது ஒரு சினிமா பாடலா நினைச்சு எழுதி இருக்கேன், கோட்டைபுரம் எனும் ஊரில் வாழுகிற மக்கள் தன்னுடைய காவல் தெய்வத்துக்கிட்ட வேண்டிக்கிட்டு பாடுற மாதிரியான சூழ்நிலைக்கு எழுதின பாடல் வரிகள்.

- ப. மதிஅழகன்